states

img

உ.பி: கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது 3 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி பலி

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது, விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலியாகினர்.

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், கட்டுமான தளம் ஒன்றில் நீண்ட நாட்கள் பயன்படுத்தப்படாத கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக தொட்டியில் இறங்கியபோது, சிவா திவாரி (25), அங்கித் பால் (22) மற்றும் அமித் குமார் (25) ஆகிய 3 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி மூச்சு தினறல் ஏற்பட்டு பரிதாபமாக பலியாகினர். 

இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், பலியான தொழிலாளர்களின் உடல்களை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து காவல்துறை துணை ஆணையர் பிரமோத் குமார், மரணமடைந்தவர்கள் குடும்பத்தினர் புகார் அளித்தால், வழக்குப் பதிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.